நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறந்த நாட்களைத்
தேர்ந்தெடுக்க நமது முன்னோர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர்.
அப்படி
கூறப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றி நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர்தான்
முகூர்த்தம். இந்த முகூர்த்தமானது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் இடையில்
வித்தியாசமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள்
போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல
முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது.
கணவன், மனைவி பந்தம்,
சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள
அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு
திருமண முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது .
மணமக்களின்
ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு
அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும்
செய்யார்.
0 komentar:
Post a Comment