Wednesday, 6 August 2014

விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?

நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன.

அக்காலத்தில் மின்சாரம் இல்லை. சிறு அகல்விளக்கு, வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது. அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறுபொருட்கள் ( விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம். இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்.  

இதனை விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டினால் "மகாலட்சுமி" வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்துள்ளனர் . 

இப்போ புரிஞ்சுதா மகாலட்சுமி'னு நம்ம பயன்படுத்துற பொருள சொல்லிருக்காங்க .

என்னே நம் முன்னோர்களின்  அறிவு ...!!!

0 komentar:

Post a Comment