Wednesday, 3 September 2014

கட்டுசோறு எளிதில் கெடுவதில்லை ஏன் ?

நம் முன்னோர்  காலத்தில் நீண்ட தூரம் வெளியூர் பயணங்கள் செல்பவர்கள் தங்களுடன் கட்டுசோறு சமைத்து வாழை இலையில் மடக்கி எடுத்து செல்வர் . அவ்வாற்று கொண்டு செல்லப்படும் சாப்பாடானது எளிதில் கெடுவதில்லை .

இத்தகைய குணத்திற்கு காரணம் , நம் முன்னோர்கள் "நல்லெண்ணெய்" பயன்படுத்தி சமைப்பதால் உண்டாகிறது .

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஊறுகாய் நல்லெண்ணையில் தயாரிக்கபடுகின்றது . இதனாலேயே  ஊறுகாய்கள் எளிதில் கெடுவதில்லை .

எண்ணெய் வகைகளில் சிவப்புத் தன்மை கொண்டது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து இந்த எண்ணெய் பெறப்படுகிறது.

 மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல்,உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியதும் கூட.
நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.

பூப்பெய்தும் இளம்பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதுற்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகின்றது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.

நல்லெண்ணெயின் மகத்துவத்தை இப்போது தெரிந்து இருப்பீர்கள். இனியாவது, சமையலில் நல்லெண்ணெயை சேர்த்துக்கொள்ளுங்கள்...!!!

0 komentar:

Post a Comment