Wednesday, 16 July 2014

நகம் கடித்தால் அப்பா அம்மாவிற்கு ஆகாது என்பது உண்மையா ?

நகம் கடிக்கும் போது நகத்திலுள்ள அழுக்கு, கிருமிகள் வாயின் வழியாக உடலுக்குள் செல்லும். அதனால் நோய்கள் ஏற்படும். துரும்பை கிள்ளினாலும் நகத்தில் அழுக்கு சேரும் அந்த நகத்தை கடிக்கும் போது அது வயிற்றுக்குள் போகும்.

நமக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா நம்மோட சேர்ந்து நம்மைப் பெத்தவங்களுக்கும் சிரமம் அதான் அப்படி சொல்லியிருக்காங்க.

எல்லாத்தையும் இவ்வளவு விளக்கமா சொன்னா கேட்போமா? ஆனா அப்பா அம்மா மேல எல்லா பிள்ளைகளுக்கும் பாசம் இருக்கும். அதான் அவங்களுக்கு ஆகாதுன்னு சொன்னா பிள்ளைங்க அந்த செயலைச் செய்ய யோசிக்கும். நம்ப முன்னோர்கள் ரொம்ப விவரமானவங்க.

0 komentar:

Post a Comment