Thursday, 12 June 2014

காலில் விழுந்து வணங்குவது ஏன்?

மார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை, வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார்.அதே போல் சப்த ரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள். அப்புறம்தான் அவர்களுக்கே மார்கண்டேயனின் ஆயுள் கால அமைப்பு தெரிய வந்தது.இருந்தாலும் சப்த ரிஷிகளின்  ஆசிர்வாதத்தால் சிவபெருமானால் மார்கண்டேயன் சிரஞ்சிவியாக வாழ்ந்தார்  என்பது புரணாமாகும். நம்முடைய முதல் தெய்வமான பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே  உண்மையாகும்..

0 komentar:

Post a Comment