Wednesday, 18 June 2014

நம் முன்னோர் கூறிய அறிவார்ந்த பழமொழிகள்

செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

எதிரிக்கு சகுனத்தடை என்று மூக்கையா அறுத்துக் கொள்வது?

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
 
காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
 
கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
 
எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல
 
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல
 
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
 
சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

0 komentar:

Post a Comment