புற்களின் அரசன் அருகம்புல். அருகன் என்றால் சூரியன் என்று
பொருள். ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர்களுக்கெல்லாம் முன்னோடியான மான்,முயல்
இரண்டுக்கும் உந்து சக்தி அருகம்புல்தான்.
ஒரு சுபகரியம் தொடங்கும்போது
அருகம்புல் வைத்து வினாயகராக நினைத்து வழிபட்டு பூஜையை தொடங்குவோம் ஏன் தெரியுமா?
வெறும் சாணியில் 3 நாட்களில் புழு பூச்சி பிடித்துவிடும் அருகம்புல்
சொருகிய சாணியில் அப்படி பிடிக்காது. இப்படி
கெட்டுப்போகாத,அழியாதபடி இந்த செயலை முடித்துக்கொடு இறைவா என வழிபட்டுதான்
ஒரு சுப காரியத்தை தொடங்குகிறோம்.
கிரகண நேரத்தில் அருகம்புல்லை வீட்டில் உள்ள அண்டா,குடம் போன்ற குடிக்கும் நீர் நிரப்பி வைத்திருக்கும் பாத்திரங்களில் போட்டு வைப்போம்.
கிரகண நேரத்தில் அருகம்புல்லை வீட்டில் உள்ள அண்டா,குடம் போன்ற குடிக்கும் நீர் நிரப்பி வைத்திருக்கும் பாத்திரங்களில் போட்டு வைப்போம்.
இது இன்றும் கிராமங்களில் கூட இருக்கும்
பழக்கம் இது மூட நம்பிக்கை அல்ல.கிரகண நேரத்தில் அதிகமாக வெளிப்படும்
ஊதாகதிர்களை தடுக்கும் சக்தி அருகம்புல்லுக்கு உண்டு
என்பதால்தான்.
விலங்குகளில் நாய்,பூனை,கோழி கூட நோய் வந்தால் அருகம்புல்லை
கடித்து துப்புவதை பார்த்திருக்கலாம்.அருகை பருகினால் ஆரோக்கியம் உடும்
என்கிறது சித்த வைத்தியம்.அருகம்புல் போதும் உனக்கு வரம் கொடுப்பேன்
என்கிறார் வினாயகர்.அருகம்புல் சாறு தினசரி குடியுங்கள்.சர்க்கரை,ரத்த
அழுத்தம் போன்ற தீரா நோயாளிகளுக்கு மட்டுமல்ல,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த
அனைவருக்கும் அருமருந்து அருகம்புல்.
0 komentar:
Post a Comment