இன்றைய காலகட்டத்தில் பல மருத்துவ முறைகள் பெருகிவிட்ட நிலையில் ,
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களும் பெருகி உள்ளது, முக்கியமாக பெண்கள்
நோய் தாக்குதலுக்கு உள்ளாவது பெருகி உள்ளது.
நம் முனோர்கள், நாம் உடம்பில் அணியும் ஆபரணங்களில் பல மருத்துவத்தினை கொண்டுள்ளனர், அந்த வகையில் பெண்கள் மெட்டி அணிவது ஏன் என தெளிவாக விளக்குகிறது நமது பதிவு...பெண்கள் மெட்டி அணிவது வெறும் திருமண சடங்கு என கருதும் பலருக்கு இந்த பதிவு தெளிவு பெற செய்யும்.
நம் முனோர்கள், நாம் உடம்பில் அணியும் ஆபரணங்களில் பல மருத்துவத்தினை கொண்டுள்ளனர், அந்த வகையில் பெண்கள் மெட்டி அணிவது ஏன் என தெளிவாக விளக்குகிறது நமது பதிவு...பெண்கள் மெட்டி அணிவது வெறும் திருமண சடங்கு என கருதும் பலருக்கு இந்த பதிவு தெளிவு பெற செய்யும்.
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.
கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும்
பாதிப்படைவதில்லை.
அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.
ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல்உள்ளதாம்.
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு,
பசியின்மை ஏற்படும்.
கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.
இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.
காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.
கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி
அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
0 komentar:
Post a Comment